திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
இந்தியத் திரையுலகத்தில் ரூ.1000 கோடி வசூலித்த நான்காவது படமாக 'கேஜிஎப் 2' படம் புதிய சாதனையை படைத்தது. கன்னடத் திரைப்படம் ஒன்று இந்த அளவிற்கு மாபெரும் வசூலைக் குவித்திருப்பது இதுவே முதல் முறை.
அப்படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் தற்போது இந்திய அளவில் கவனம் பெறும் இயக்குனர்களில் ஒருவராக மாறிவிட்டார். அவர் தற்போது பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தை இயக்கி வருகிறார். அப்படத்திற்குப் பிறகு ஜுனியர் என்டிஆர் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் என்று ஒரு தகவல்.
இதனிடையே, பிரசாந்த் நீலை தங்களது படங்களில் ஒப்பந்தம் செய்ய சில முன்னணி தெலுங்கு தயாரிப்பு நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றனவாம். இதனால், தன்னுடைய சம்பளத்தை 50 கோடியாக உயர்த்திவிட்டாராம் பிரசாந்த் நீல். இருந்தாலும் பரவாயில்லை எங்களுக்கு படம் செய்து தாருங்கள் என அதையும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்களாம்.
தென்னிந்தியத் திரையுலகத்தில் ராஜமவுலிக்குப் பிறகு அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் பிரசாந்த் நீல் தான் இருக்கிறாராம். 'சலார்' படமும் வெற்றி பெற்றுவிட்டால் 100 கோடி ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.