திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
தெலுங்கில் 2020ம் ஆண்டு வெளிவந்து சிறப்பான வரவேற்பைப் பெற்ற ஒரு படம் 'ஹிட்'. அந்தப் படத்தில் நாயகனாக நடித்த விஷ்வக் சென் நடித்து அடுத்து 'அசோகவனம்லோ அர்ஜுன கல்யாணம்' என்ற படம் வெளிவர உள்ளது. அப்படத்திற்காக ஒரு யு டியூபரை வரவழைத்து ஐதராபாத் வீதிகளில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு அந்த யு டியூபர் தற்கோலை செய்து கொள்வது போல 'பிரான்க்' நிகழ்ச்சியை நடத்தினர். அதற்கு சமூக ஆர்வலர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. விஷ்வக் சென் மீதும் வழக்குகள் போடப்பட்டது.
அது குறித்து விவாதிக்க விஷ்வக் சென்னை தெலுங்கு செய்தி சேனலான டிவி 9 விவாதம் ஒன்றிற்கு அழைத்தது. அப்போது விஷ்வக் மீது சில குற்றச்சாட்டுக்களை வைத்தார் செய்தி வாசிப்பாளர் தேவி நாகவள்ளி. அதனால் கோமடைந்த விஷ்வக் சென் பேசும் போது ஒரு பெரிய கெட்ட வார்த்தையை நேரலையின் பயன்படுத்தினார். அதைக் கேட்டு கோபமடைந்த செய்தி வாசிப்பாளர் தேவி நாகவள்ளி, விஷ்வக் சென்னை ஸ்டுடியோவை விட்டு வெளியேறும்படி 'கெட் அவுட்' சொன்னார். தேவி அவரது செயலில் பிடிவாதமாக இருந்ததால் வேறு வழியில்லாமல் மைக்கை கழட்டி வைத்து விஷ்வக் சென் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இந்த விவகாரம் தெலுங்குத் திரையுலகத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.