ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
பார்த்திபன் இயக்கம் நடிப்பில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள 'இரவின் நிழல்' படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு நேற்று இரவு சென்னையில் நடைபெற்றது. விழா மேடையே ஒரு பூங்கா போல செட் செய்து அற்புதமான லைட்டிங், மேடை அலங்காரங்களுடன் தனக்கே உரிய பாணியில் வித்தியாசமாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார் பார்த்திபன்.
ஆனால், நிகழ்ச்சியில் அவர் செய்த செயல் ஒன்று பார்வையாளர்களையும், விழாவுக்கு வந்திருந்த விருந்தினர்களையும், இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானையும் அதிர்ச்சியடைய வைத்தது. விழாவில் ரோபோ சங்கர் மைக் கேட்க பார்த்திபன் சற்றே கோபமாகி ரோபோ சங்கரை நோக்கி மைக்கை வீசி எறிந்து, “அதை முன்னாடி இல்ல கேட்கணும்,” என்று கோபமாகப் பேசினார்.
இதுபற்றி பார்த்திபன் நம்மிடம் கூறுகையில், ‛‛ரஹ்மானுக்கு விருது கொடுக்கும் போது அந்த வெள்ளி ஷீல்டு 8 கிலோ இருந்தது. அவர் மேல் அந்த வெயிட் போய் சேர்ந்து விடக் கூடாது என்கிற பதட்டம் இருந்தது. கை, கால்களில் ஏதோ ஷாக் அடித்த மாதிரி ஒரு உணர்வு. அப்போது கொஞ்சம் நிலை தடுமாறிவிட்டேன். கடந்த இரண்டு நாட்களாக தூக்கமில்லாமல் வேலை பார்த்தேன். இதுபோன்ற நிறைய காரணங்களால் நான் செய்யக்கூடாத ஒரு விஷயத்தை செய்துவிட்டேன். வருத்தப்பட்டு கொண்டிருக்கிறேன். இனி சரி செய்து கொள்கிறேன்.
இவ்வாறு பார்த்திபன் தெரிவித்தார்.