தயாரிப்பாளர் சங்கத்திலும் தலைவர் பதவிக்கு நடிகை போட்டி : பர்தா அணிந்து வந்து மனு தாக்கல் | வார்-2வில் ஹிருத்திக் ரோஷனை விட அதிக சம்பளம் யாருக்குத் தெரியுமா? | மஞ்சு வாரியரா? காவ்யா மாதவனா? : பெண் நடுவரை சிக்கலில் மாட்டிவிட்ட நடிகர் | ஸ்ரீதேவிக்கு ராம் கோபால் வர்மா கொடுத்த ‛டயட் டார்ச்சர்' : சால்பாஸ் இயக்குனர் பகீர் குற்றச்சாட்டு | படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் |
பிரேமம் படத்தில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் கொடி. தள்ளிப்போகாதே போன்ற படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கில் பிசியாக நடித்து வரும் அனுபமா பரமேஸ்வரன், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சூர்யா பேட்டை என்ற பகுதியில் ஒரு வணிக வளாகத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார். இவர் வருவதை அறிந்து அங்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து உள்ளார்கள். அப்போது அங்கு சென்ற அனுபமா ரசிகர்களைப் பார்த்து கையசைத்து படி சென்றுள்ளார். ஆனால் நிகழ்ச்சி முடிந்ததும் தனது காரில் ஏற வந்த அவருடன் செல்பி எடுப்பதற்கு ரசிகர்கள் சூழ்ந்து உள்ளார்கள். ஆனால் அனுபவம் போலீஸ் பந்தோபஸ்துடன் தனது காரில் ஏறி அங்கிருந்து புறப்பட முற்பட்டுள்ளார். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த ரசிகர்கள் அவரது காரை செல்லவிடாமல் ரகளை செய்ததோடு, கார் டயரில் காற்றை பிடுங்கி விட்டு உள்ளார்கள். இதனால் வேறொரு காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு உள்ளார் அனுபமா. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.