பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் |
பிரேமம் படத்தில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் கொடி. தள்ளிப்போகாதே போன்ற படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கில் பிசியாக நடித்து வரும் அனுபமா பரமேஸ்வரன், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சூர்யா பேட்டை என்ற பகுதியில் ஒரு வணிக வளாகத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார். இவர் வருவதை அறிந்து அங்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து உள்ளார்கள். அப்போது அங்கு சென்ற அனுபமா ரசிகர்களைப் பார்த்து கையசைத்து படி சென்றுள்ளார். ஆனால் நிகழ்ச்சி முடிந்ததும் தனது காரில் ஏற வந்த அவருடன் செல்பி எடுப்பதற்கு ரசிகர்கள் சூழ்ந்து உள்ளார்கள். ஆனால் அனுபவம் போலீஸ் பந்தோபஸ்துடன் தனது காரில் ஏறி அங்கிருந்து புறப்பட முற்பட்டுள்ளார். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த ரசிகர்கள் அவரது காரை செல்லவிடாமல் ரகளை செய்ததோடு, கார் டயரில் காற்றை பிடுங்கி விட்டு உள்ளார்கள். இதனால் வேறொரு காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு உள்ளார் அனுபமா. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.