இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
விக்ரம் பிரபு நடிப்பில் தமிழ் இயக்கிய டாணாக்காரன் படம் சமீபத்தில் வெளியானது. இது போலீஸ் பயிற்சி பள்ளியின் பின்னணில் உருவான படம். இந்த படம் தமிழகத்தில் உள்ள 43 காவலர் பயிற்சி பள்ளியிலும் திரையிடப்பட்டுள்ளது. சென்னையில் அசோக் நகரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் 'டாணாக்காரன்' திரையிடப்பட்டது. இதில் இயக்குநர் தமிழ் கலந்து கொண்டார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: ஒரு படத்துக்குப் பட்ட கஷ்டம் எல்லாமே, அதன் வெற்றியில் காணாமல் போய்விடும் என்பார்கள். அப்படியான சந்தோஷத்தில் இருக்கிறேன். 'டாணாக்காரன்' கதையை எதற்காக எழுதினேனோ, அதற்கான விஷயமும் நடைபெற்றதில் கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கிறேன். காவலர் பயிற்சி பள்ளியை முன்வைத்து எழுதிய கதையை அங்கே பயிற்சி பெற்று வரும் காவலர்களுக்குத் திரையிட்டுக் காட்டினார்கள். அவர்கள் அனைவரும் பார்த்துவிட்டுப் பாராட்டினார்கள். தமிழகம் முழுவதும் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் 'டாணாக்காரன்' திரையிட ஆணையிட்ட பயிற்சி ஐ.ஜி அருளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்கிறார் தமிழ்.