கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
தமிழ் சினிமாவில் சின்னக்கலைவாணர் என ரசிகர்களால் அழைக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த வருடம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சினிமாவில் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக நகைச்சுவை கலந்து கருத்துக்களை கூறிவந்த விவேக், இன்னொரு பக்கம் மரம் நடுவதன் அவசியம் குறித்து வலியுறுத்தி பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு இளைய தலைமுறையிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வந்தார்.
அந்த வகையில் இந்த சமுதாயத்திற்கு தன்னாலான சிறப்பான பங்களிப்பை தந்துள்ள, தனது கணவர் விவேக்கின் பெயரை அவர் இதுநாள் வரை வசித்துவந்த தெருவுக்கு சூட்ட வேண்டுமென அவரது மனைவி அருள்செல்வி தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.
அவரது இந்த கோரிக்கை குறித்து நடிகை கஸ்தூரி கூறும்போது, “உண்மையிலேயே இப்படி அவரது தெருவுக்கு விவேக்கின் பெயரை சூட்டுவது அந்த மக்கள் கலைஞனுக்கு செய்யும் மிகப்பெரிய கவுரவமாக இருக்கும்” என்றும் வரவேற்றுள்ளார்.