விஜயகாந்த் வழியில் பயணிக்கும் சண்முக பாண்டியன் | அஞ்சான் படத்தை ரீ-எடிட் செய்து மீண்டும் ரிலீஸ் செய்யும் லிங்குசாமி | 45வது படத்தில் கடவுள் வேடத்தில் நடிக்கும் சூர்யா | பிளாஷ்பேக்: சொப்பன சுந்தரி யார் தெரியுமா? | ஜூலை 18ல் ரீ ரிலீஸ் ஆகும் நாகசைதன்யா, சமந்தா படம் | பிளாஷ்பேக்: பாண்டியராஜனுக்காக ஆஸ்பத்திரி வாசலில் படுத்துக் கிடந்த கொல்லங்குடி கருப்பாயி | மகளின் விழாவில் குடும்பத்துடன் நடனமாடிய ஏ.ஆர்.முருகதாஸ் | நான் இன்னமும் என்னை ஒரு நடிகராகவே கருதுகிறேன் : அமீர்கான் | வளர்ந்து வரும் நடிகர் சங்கக் கட்டுமானம்: வீடியோ வெளியீடு | 'காந்தாரா' ஷூட்டிங்கில் மீண்டும் விபத்து |
தன்னை ஏமாற்றி நில மோசடி செய்ததாக காமெடி நடிகர் சூரி, நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை மீது அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் கைதாவார் என்று தெரிகிறது.
நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், முன்னாள் டிஜிபியுமான ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் ஆகியோர் இடம் வாங்கித் தருவதாக கூறி 2 கோடியே 90 லட்சம் வாங்கினார்கள். ஆனால் இடம் வாங்கித் தராமல் ஏமாற்றினார்கள். இதுகுறித்து புகார் அளித்த பிறகு ஒரு கோடியே 30 லட்சத்தை திருப்பிக் கொடுத்து விட்டு மீதமுள்ள பணத்தை தராமல் மோசடி செய்து விட்டனர் என்று சூரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதைத்தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் மீனா தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நடிகர் சூரி துணை கமிஷனர் மீனா முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்த விசாரணையில், நடிகர் சூரியிடம் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் சினிமா தயாரிப்பாளர் அன்புவேல் ராஜ் பணம் பெற்றது ஆவணங்கள் மூலம் உறுதியாகி உள்ளது. இதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் சினிமா தயாரிப்பாளர் அன்புவேல் ராஜ் மீது மோசடி வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கில் ரமேஷ் குடவாலாவும், அன்புவேல்ராஜனும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. அதற்கு முன்பு ரமேஷ் குடாவாவையும், அன்புவேல்ராஜனையும் நேரில் அழைத்து விசாரிக்கவும் குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.