வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? | மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? |
தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினி. அதன் பிறகு கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார். ஆனால் இந்த இரண்டு படங்களுமே தோல்வி அடைந்து விட்டன. கடந்த 7 ஆண்டுகளாக படங்கள் இயக்காமல் இருந்த ஐஸ்வர்யா ரஜினி, தற்போது மீண்டும் முழுவீச்சில் படங்கள் இயக்குவதில் இறங்கியிருக்கிறார். சமீபத்தில் பயணி என்ற வீடியோ ஆல்பத்தை இயக்கி வெளியிட்டார். அடுத்து அவர் விரைவில் பாலிவுட்டில் ஒரு படம் இயக்க போகிறார்.
இதுபற்றி ஐஸ்வர்யா கூறுகையில், வை ராஜா வை படம் திரைக்கு வந்த நேரத்தில் ஹிந்தியில் படம் இயக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் எனது மகன்கள் சிறுவர்களாக இருந்ததால் அப்போது படம் இயக்குவதில் கவனம் செலுத்த முடியவில்லை. தற்போது ஒரு படத்தை இயக்குகிறேன் என்றவர், ஹிந்தியில் ஹிருத்திக் ரோஷன், ரன்வீர்சிங் போன்ற நடிகர்களை வைத்து படம் இயக்க தான் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.