பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
மிகுந்த எதிர்பார்ப்புடன் சமீபத்தில் வெளியான பீஸ்ட் போதிய வரவேற்பை பெறாததால் விஜய் ரொம்பவே அப்சட் ஆகியிருக்கிறார். இதனால் அடுத்து உடனடியாக ஒரு வெற்றியை கொடுத்து தனக்கு ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்ப வேகமெடுத்திருக்கிறார்.
விஜய் தற்போது தனது 66வது படத்தில் நடித்து வருகிறார். படம் தெலுங்கு, தமிழில் தயாராகிறது. தெலுங்கு டைரக்டர் வம்சி பைடபள்ளி இந்த படத்தை இயக்குகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா மூவிஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார். தமன் இசையமைக்கிறார். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கெனவே தொடங்கி விட்டது. இதுவரை 30 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. தற்போது விஜய், ராஷ்மிகா தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இரண்டாவது கட்ட படப்பிடிப்புகள் அடுத்த வாரம் தொடங்குகிறது என்கிறார்கள். இந்த படம் குடும்ப உறவுகளை பற்றிய சென்டிமெண்ட் படம் என்பதால் அதிகமான ஆக்ஷன் காட்சிகள் இல்லை. எனவே படத்தை குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாக முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். வருகிற தீபாவளிக்கு படத்தை திரைக்கு கொண்டு வந்து ஒரு வெற்றியை கொடுத்து விட வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருப்பதால் படத்தின் பணிகளும் மின்னல் வேகத்தில் நடந்து வருவதாக தெரிகிறது.