மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்த கேஜிஎப் படத்தின் இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. அதிலும் கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுக்க வெளியாகி உள்ளது. அந்த வகையில் நான்கு நாட்களில் 500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை புரிந்தது. இதன் காரணமாக கேஜிஎப் படத்தின் மூன்றாம் பாகம் குறித்து எதிர்பார்ப்புகள் ரசிகர் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியது.
இந்த நிலையில் தற்போது அது குறித்த ஒரு அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதாவது கேஜிஎப் மூன்றாம் பாகத்தின் முதல் கட்ட பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாக படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் கவுடா தெரிவித்துள்ளார்.
தற்போது கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல், பிரபாஸ்- ஸ்ருதிஹாசன் நடித்து வரும் சலார் என்ற படத்தை இயக்கி வருகிறார். அடுத்து ஜூனியர் என்டிஆர் படத்தை இயக்குகிறார். இதற்கு பின் கேஜிஎப் 3 துவங்கும் என தெரிகிறது.