தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்த கேஜிஎப் படத்தின் இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. அதிலும் கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுக்க வெளியாகி உள்ளது. அந்த வகையில் நான்கு நாட்களில் 500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை புரிந்தது. இதன் காரணமாக கேஜிஎப் படத்தின் மூன்றாம் பாகம் குறித்து எதிர்பார்ப்புகள் ரசிகர் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியது.
இந்த நிலையில் தற்போது அது குறித்த ஒரு அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதாவது கேஜிஎப் மூன்றாம் பாகத்தின் முதல் கட்ட பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாக படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் கவுடா தெரிவித்துள்ளார்.
தற்போது கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல், பிரபாஸ்- ஸ்ருதிஹாசன் நடித்து வரும் சலார் என்ற படத்தை இயக்கி வருகிறார். அடுத்து ஜூனியர் என்டிஆர் படத்தை இயக்குகிறார். இதற்கு பின் கேஜிஎப் 3 துவங்கும் என தெரிகிறது.