பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
அமராவதி : ஆந்திராவில் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நடிகை ரோஜா, 'இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன்' என அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது: திரைப்படத்துறையில் இருந்து நான் அரசியலுக்கு வர ஜெயலலிதா, என்.டி.ராமாராவ் போன்றவர்கள் உத்வேகமாக இருந்தனர். முதலில் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்தபோது சந்திரபாபு நாயுடு வெற்றிக்காக 'நக்சல்'கள் ஆதிக்கம் உள்ள பகுதிகளிலும் உயிரை பணயம் வைத்து பிரசாரம் மேற்கொண்டேன்.
அதை கருத்தில் கொள்ளாத அவர், அரசியலில் இருந்து என்னை வெளியேற்றுவதையே நோக்கமாக கொண்டு செயல்பட்டார். பின், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வழங்கிய வாய்ப்பால் நகரி தொகுதியில் இரு முறை வெற்றி பெற்றேன். சட்டசபைக்குள் நுழையும் வாய்ப்பை சந்திரபாபு நாயுடு வழங்கவில்லை. இப்போது அமைச்சராகும் வாய்ப்பை ஜெகன்மோகன் ரெட்டி வழங்கி உள்ளார்.
எம்.எல்.ஏ.,வாக இருந்தாலும், வருமானத்திற்காக திரைப்படங்களில் நடித்ததுடன், 'டிவி' நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றேன். இதையும் சிலர் விமர்சித்தனர். ஆனால், ஜெகன்மோகன் ரெட்டி எதுவும் கேட்டதில்லை.தற்போது அமைச்சராகி உள்ளதால் பொறுப்புகள் அதிகரித்து உள்ளன. எனவே, இனி திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் நடிக்க மாட்டேன்.இவ்வாறு அவர்கூறினார்.