அஜித்துக்கு என்னாச்சு : இப்படி மாறிட்டாரே? | போதைப் பொருள் வழக்கு : தமிழ்த் திரையுலகில் பரபரப்பு… | சுரேஷ் கோபி பட டைட்டிலை சென்சார் மாற்ற சொன்னதன் காரணம் இதுதான் | ஹேக்கிங் செய்யப்பட்ட ஸ்ருதிஹாசனின் எக்ஸ் கணக்கு | கிச்சா சுதீப்பின் பேச்சுக்கு கர்நாடக துணை முதல்வர் பதில் | ‛பேட்ரியாட்' டைட்டிலை உறுதி செய்த மோகன்லால் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளருக்கு முன்ஜாமீன் தரக்கூடாது : நீதிமன்றத்தில் கேரள போலீஸார் மனு | குடும்ப பிரச்னையால் தவறு செய்துவிட்டேன் : போலீஸ் விசாரணையில் ஸ்ரீகாந்த் கண்ணீர் | திருக்குறள் படத்தை முதல்வர் பார்ப்பாரா? | நியூயார்க் திரைப்பட விழாவில் அங்கம்மாளுக்கு கவுரவம் |
ஹாலிவுட்டின் பிரபல நடிகர் வில் ஸ்மித். சமீபத்தில் நடந்த ஆஸ்கர் விழாவில் இவருக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. இந்த விழாவில் வில் ஸ்மித்தின் மனைவி ஜடாவின் மொட்டை தலை குறித்து கிண்டல் செய்தார் நிகழ்ச்சி தொகுப்பாளரும், நடிகருமான கிறிஸ் ராக். இதனால் கோபமான வில் ஸ்மித், விழா மேடைக்கு சென்று கிறிஸ் ராக்கின் கன்னத்தில் ஓங்கி பளார் என அறைந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் தனது செயலுக்காக மன்னிப்பு கோரினார் வில் ஸ்மித்.
இருப்பினும் இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற சூழல் வந்தபோது ஆஸ்கர் கமிட்டியில் தான் வகித்த பொறுப்பை ராஜினாமா செய்தார் வில் ஸ்மித். இந்நிலையில் இதுதொடர்பாக வில் ஸ்மித்திடம் ஆஸ்கர் குழு நேற்று விசாரணை நடத்தினர். பின்னர் ஆஸ்கர் விழாக்களில் பங்கேற்க வில் ஸ்மித்திற்கு 10 ஆண்டுகள் தடை விதிப்பதாக ஆஸ்கர் விருதுகள் வழங்கும் அகாடமி குழுவினர் அறிவித்துள்ளனர்.