பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
நடிகை நிலா ஞாபகமிருக்கிறதா ?. எஸ்ஜே சூர்யா இயக்கி, நடித்த 'அன்பே ஆருயிரே' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அந்த படத்திற்குப் பிறகு சில தமிழ்ப் படங்களில் நடித்தார். தெலுங்கு, ஹிந்தி, கன்னடப் படங்களிலும் நடித்தார். கடைசியாக தமிழில் 2011ல் வெளிவந்த 'கில்லாடி' படத்தில் நடித்திருந்தார்.
தற்போது தனது பெற்றோர் வைத்த பெயரான மீரா சோப்ரா என்ற பெயரையே சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தி வருகிறார். அடிக்கடி பதிவுகளையும் பதிவிடுவார். இன்றைய பதிவில் பான்--இந்திய ஹீரோக்களாக வெற்றி பெற்றுள்ள தென்னிந்திய ஹீரோக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“தென்னிந்திய நடிகர்கள் பான்-இந்தியா அங்கீகராம் பெறுவதில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்களது திறமை, பணிவு, வேட்கை ஆகியவற்றிலிருந்து ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டும். பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராம் சரண், யஷ் ஆகியோரை பார்க்கும்போது மிகவும் பெருமையாக உள்ளது” என அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால், அவரது லிஸ்ட்டில் ஜுனியர் என்டிஆரைக் குறிப்பிட மறந்துவிட்டார்.