ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
நடிகை நிலா ஞாபகமிருக்கிறதா ?. எஸ்ஜே சூர்யா இயக்கி, நடித்த 'அன்பே ஆருயிரே' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அந்த படத்திற்குப் பிறகு சில தமிழ்ப் படங்களில் நடித்தார். தெலுங்கு, ஹிந்தி, கன்னடப் படங்களிலும் நடித்தார். கடைசியாக தமிழில் 2011ல் வெளிவந்த 'கில்லாடி' படத்தில் நடித்திருந்தார்.
தற்போது தனது பெற்றோர் வைத்த பெயரான மீரா சோப்ரா என்ற பெயரையே சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தி வருகிறார். அடிக்கடி பதிவுகளையும் பதிவிடுவார். இன்றைய பதிவில் பான்--இந்திய ஹீரோக்களாக வெற்றி பெற்றுள்ள தென்னிந்திய ஹீரோக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“தென்னிந்திய நடிகர்கள் பான்-இந்தியா அங்கீகராம் பெறுவதில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்களது திறமை, பணிவு, வேட்கை ஆகியவற்றிலிருந்து ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டும். பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராம் சரண், யஷ் ஆகியோரை பார்க்கும்போது மிகவும் பெருமையாக உள்ளது” என அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால், அவரது லிஸ்ட்டில் ஜுனியர் என்டிஆரைக் குறிப்பிட மறந்துவிட்டார்.