கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்பவர் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன். ஒத்த செருப்பு படத்தில் அவர் ஒருவர் மட்டுமே நடித்து வியக்க வைத்தார். இதற்காக தேசிய விருதும் கிடைத்தது. இப்போது அடுத்த முயற்சியாக இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி, நடித்துள்ளார். ஒரே ஷாட்டில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை மே 1ம் தேதி பிரம்மாண்டமாக நடத்த உள்ளார் பார்த்திபன். இதுபற்றி அவர் கூறுகையில், சென்னை தீவுத்திடலில் மே 1ல் இரவின் நிழல் இசை வெளியீட்டு விழா நடக்கிறது. இதில் பங்கேற்க இந்திய அளவிலான பிரபலங்களுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. இது என் பட இசை வெளியீடு என்பதை விட ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எடுக்கும் விழா என்று சொல்லலாம். இசையில் அவர் செய்த சாதனையை கவுரவிக்கும் விழாவாகவும் இருக்கும்'' என்றார்.