பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது |

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்-13ம் தேதி வெளியாக உள்ளது.. ஆனாலும் இப்போது வரை இந்தப்படத்தில் வில்லனாக எந்த நடிகர் நடித்துள்ளார் என்கிற விஷயத்தை சஸ்பென்சாகவே வைத்துள்ளார்கள். முதலில் செல்வராகவன் வில்லன் என்றார்கள்.. ஆனால் அவரோ வில்லன்கள் கூட்டத்துடன் பேச்சு வார்த்தை நடத்தும் அதிகாரியாக தான் நடித்துள்ளார்.
இந்தப்படத்தின் டிரைலரில் முகமூடி அணிந்த வில்லன் நபரை பார்த்துவிட்டு இந்தப்படத்தில் நடித்துள்ள மலையாள வில்லன் நடிகர் ஷைன் டாம் சாக்கோ தான் அந்த முகமூடி மனிதர் என்றும், அவர்தான் வில்லனாக நடித்துள்ளார் என்றும் கூட சொல்ல ஆரம்பித்தார்கள்.
ஆனால் அந்த முகமூடி மனிதரே தான் யார் என்கிற உண்மையை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவர் வேறு யாருமல்ல.. பாலிவுட் நடிகர் அங்கூர் விகால் தான்.. அதுமட்டுமல்ல மூன்று வருடங்களுக்கு முன் தமிழில் வெளியான மெஹந்தி சர்க்கஸில் கதாநாயகியின் முறை மாப்பிள்ளையாக நடித்திருந்ததும் இவர் தான். ஆனால் பீஸ்ட் படத்தில் இவர் தான் மெயின் வில்லனா என்கிற கேள்விக்கு மட்டும் மனிதர் பதில் சொல்லாமல் நழுவி விட்டார்..