புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
அஞ்சாதே படத்தின் மூலம் அறிமுகமானவர் அஜ்மல், அதன்பிறகு போதிய வாய்ப்புகள் இல்லாமல் இருந்தவர் கோ படத்தின் மூலம் வில்லன் ஆனார். மீண்டும் சில படங்களில் ஹீரோவாக நடித்தவர் அதன்பிறகும் போதிய வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். மத்திய சென்னை, காட்டு பயசார் இந்த காளி, படங்களை தயாரித்து அதில் தானே ஹீரோவாக நடித்தவர் ஜெய்வந்த். ஹீரோவாக ஜெயிக்க போராடிக் கொண்டிருப்பவர்களில் ஒருவர்.
சிவாஜியின் பேரன் துஷ்யந்த் (ராம்குமாரின் மகன்). சக்சஸ் என்ற படத்தில் அறிமுகமாக அதன்பிறகு மச்சி என்ற படத்தில் நடித்தார். இரண்டு படமுமே கை கொடுக்காத நிலையில் நடிப்பில் இருந்து விலகினார்.
இந்த மூவரும் தற்போது தீர்க்கதரிசி என்ற படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். ஸ்ரீ சரவணா பிலிம்ஸ் சதிஷ் குமார் தயாரிக்கிறார், பி.ஜி.மோகன் , எல்.ஆர்.சுந்தரபாண்டி இணைந்து இயக்குகின்றனர். ஜி.பாலசுப்பிரமணியம் இசை அமைக்கிறார், ஜெ.லட்சுமண குமார் ஒளிப்பதிவு செய்கிறார். பூஜையுடன் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியது. ரீ எண்ட்ரி ஆகும் மூன்று ஹீரோக்களுக்கும் தீர்க்கதரிசி திருப்பம் தருவாரா என்பது படம் வெளியானதும் தெரியும்.