பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
அஞ்சாதே படத்தின் மூலம் அறிமுகமானவர் அஜ்மல், அதன்பிறகு போதிய வாய்ப்புகள் இல்லாமல் இருந்தவர் கோ படத்தின் மூலம் வில்லன் ஆனார். மீண்டும் சில படங்களில் ஹீரோவாக நடித்தவர் அதன்பிறகும் போதிய வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். மத்திய சென்னை, காட்டு பயசார் இந்த காளி, படங்களை தயாரித்து அதில் தானே ஹீரோவாக நடித்தவர் ஜெய்வந்த். ஹீரோவாக ஜெயிக்க போராடிக் கொண்டிருப்பவர்களில் ஒருவர்.
சிவாஜியின் பேரன் துஷ்யந்த் (ராம்குமாரின் மகன்). சக்சஸ் என்ற படத்தில் அறிமுகமாக அதன்பிறகு மச்சி என்ற படத்தில் நடித்தார். இரண்டு படமுமே கை கொடுக்காத நிலையில் நடிப்பில் இருந்து விலகினார்.
இந்த மூவரும் தற்போது தீர்க்கதரிசி என்ற படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். ஸ்ரீ சரவணா பிலிம்ஸ் சதிஷ் குமார் தயாரிக்கிறார், பி.ஜி.மோகன் , எல்.ஆர்.சுந்தரபாண்டி இணைந்து இயக்குகின்றனர். ஜி.பாலசுப்பிரமணியம் இசை அமைக்கிறார், ஜெ.லட்சுமண குமார் ஒளிப்பதிவு செய்கிறார். பூஜையுடன் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியது. ரீ எண்ட்ரி ஆகும் மூன்று ஹீரோக்களுக்கும் தீர்க்கதரிசி திருப்பம் தருவாரா என்பது படம் வெளியானதும் தெரியும்.