கதையின் நாயகனாக விநாயகன் ; வில்லனாக மம்முட்டி | கவியூர் பொன்னம்மாவின் மறைவும் மஞ்சு வாரியரின் நிறைவேறாத ஆசையும் | செப்டம்பர் 27ல் நான்கு முனைப் போட்டி | 'ஜானு பாப்பா' என அழைக்கும் ரசிகர்கள் : ஜான்வி கபூர் மகிழ்ச்சி | பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் |
சமூகவலைதளங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. திரைப்பிரபலங்கள் குறிப்பாக நடிகைகள் சமூகவலைதளங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். அதேசமயம் பிரபலங்களின் சமூக வலைத்தள கணக்குகள் ஹேக் செய்யப்படுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டா கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "எனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா அல்லது முடக்கப்பட்டுள்ளதா என தெரியவில்லை . விரைவில் எனது கணக்கை மீட்டு தர இன்ஸ்டாக்ராமை கேட்டுக்கொள்கிறேன்'' என கூறியிருந்தார்.
தற்போது அவரின் இன்ஸ்டா கணக்கு மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி விட்டது என கூறி நன்றி தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா.