மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கியுள்ள நெல்சன் திலீப்குமார் அடுத்து ரஜினி நடிக்கும் 169 ஆவது படத்தை இயக்கப் போகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இது குறித்த தகவல் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் தற்போது ஸ்கிரிப்ட் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.
நெல்சன் அளித்துள்ள ஒரு பேட்டியில், நான் ரஜினி படம் இயக்குவதற்கு விஜய் தான் காரணம். பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது தனது அடுத்த படத்திற்கான கதையை ரஜினி கேட்டு வருவதாக கூறிய விஜய், நீங்கள் ஏன் முயற்சி செய்யக் கூடாது என்று கூறினார். ஆனால் ரஜினி மிகப்பெரிய லெஜண்ட் என்பதால் அவருக்கு எப்படி கதை தயார் செய்வது என்று தயக்கமாக இருந்தது. ஆனால் விஜய் என்னுடைய தயக்கத்தை உடைத்தெறிந்து ரஜினி இடத்தில் கதை சொல்ல வைத்தார். அவர் கொடுத்த தைரியம் நம்பிக்கை காரணமாக தான் இப்போது நான் ரஜினியின் 169வது படத்தை இயக்குவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன் என்று அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் நெல்சன்.