அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் |
தென்னிந்திய சினிமாவின் முக்கியமான பழம்பெரும் நடிகை லட்சுமி. தென்னிந்திய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக அவர் 2015ம் ஆண்டு வெளியான மூணே மூணு வார்த்தை என்ற படத்தில் நடித்தார். மதுமிதா இயக்கிய இந்த படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஜோடியாக நடித்தார்.
அதன்பிறகு தெலுங்கில் சமந்தாவுடன் ஓ பேபி படத்தில் நடித்தவர் இப்போது கன்னடப் படத்தில் நடிக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: கொரோனா காலத்துக்கு முன்பே தொடங்கப்பட்ட படம். இப்போது நிலைமை சரியானதும் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இயக்குநர் கதையை சொன்ன விதம் எனக்கு பிடித்திருந்தது, கதையும் பிடித்திருந்தது அதனால் நடிக்க ஒப்புக் கொண்டேன். ஒரே பிரச்சினையை வெவ்வேறு நபர்கள் எப்படி கையாளுகிறார்கள் என்பதுதான் படத்தின் ஒன் லைன். நல்ல கதைகள் அமைந்தால் தொடர்ந்து நடிப்பேன். இன்னும் உயிரோடு இருப்பதுதான் என்னை நடிக்க வைக்கிறது, நான் விரும்பும் விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று நினைப்பேன். இளைய தலைமுறையிடமிருந்தும் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். என்றார்.