சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? | மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் |
பிரபாஸ் நடிப்பில் கடந்த வாரம் ராதே ஷ்யாம் படம் வெளியானது. பாகுபலி படத்திற்கு பிறகு வெளியான சாஹோ திரைப்படம் ரசிகர்களை திருப்திப்படுத்தாத நிலையில், ராதே ஷ்யாம் மூலம் அதை பிரபாஸ் அதை ஈடு செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற தவறியுள்ளது. இதற்கு அடுத்ததாக பிரசாந்த் நீல் டைரக்ஷனில் நடித்து வரும் சலார் படத்தை பிரபாஸ் ரொம்பவே எதிர்பார்க்கிறார்.
இந்த நிலையில் சலார் படத்தின் படப்பிடிப்பின்போது பிரபாஸுக்கு சில காயங்கள் ஏற்பட்டன. தற்போது இதற்காக ஒரு மைனர் சர்ஜரி செய்ய வேண்டி இருப்பதால் ஸ்பெயின் நாட்டுக்கு கிளம்புகிறார் பிரபாஸ். இந்த தகவலைக் கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள் மைனர் சர்ஜரி முடிந்து அவர் விரைவில் குணமாகி திரும்ப வேண்டுமென சோசியல் மீடியாவில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.