கிண்டல் செய்த ரசிகருக்கு மாளவிகா மோகனன் கொடுத்த பதிலடி | நடிகர் ஸ்ரீ எழுதிய ஆங்கில நாவல் வெளியானது! | தக் லைப் படம் ரிலீஸை தடுத்தால் வழக்குப்பதிவு: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை! | குபேரா படத்திற்கு 19 இடங்களில் கட் கொடுத்த சென்சார் போர்டு | விஜய்யை தொடர்ந்து ரஜினியை இயக்குகிறாரா வினோத்? | அஜித் குமாரை நேரில் சந்தித்த யுவன் சங்கர் ராஜா | விக்ரம் பிரபுவின் ‛லவ் மேரேஜ்' டிரைலர் வெளியீடு | 50 கோடியில் காசி செட் : ராஜமவுலி படத்துக்காக தயாராகுது | ‛பஞ்சாயத்து' சீரிஸ் என்னை இந்தியா முழுக்க அறிய வைத்திருக்கிறது - நீனா குப்தா பெருமிதம் | டிஎன்ஏ படத்தை அவங்களுக்கு அர்ப்பணிக்கிறேன் : ஹீரோ அதர்வா முரளி நெகிழ்ச்சி |
கேரள சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்த விழாவில் நடிகை பாவனா கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். அதற்கு முன்னதாக அவரை வீரப்பெண்மணி என பலரும் பாராட்டினார்கள். பாவனாவின் பெயரை கூறியதும் அரங்கத்தில் இருந்தோர் எழுந்து நின்று ஒருநிமிடம் வரை கைதட்டல் செய்து தங்களது ஆதரவை அவருக்கு தெரியப்படுத்தினர்.
கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக நடிகை பாவனாவுக்கு அவரது வாழ்வில் விரும்பத்தகாத நிகழ்வு ஒன்று நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக சட்டத்தின் மூலம் போராடி வருகிறார். அதேசமயம் கடந்த நான்கு வருடங்களில் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத பாவனா அரசு அழைப்பை ஏற்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அவரது இந்த வருகையை ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர்.