இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி | ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா |
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படம் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க விஜய் ஆண்டனி விரும்பினார். ஆனால் அதற்கு சசி ஒப்புக் கொள்ளவில்லை. அவர் நூறு கோடி வானவில் என்கிற காதல் கதையை இயக்கச் சென்று விட்டார். இந்த நிலையில் விஜய் ஆண்டனியே பிச்சைக்காரன் படத்தின் 2ம் பாகத்தை இயக்கத் தொடங்கி விட்டார். இந்த படத்தை அவரது மனைவி பாத்திமா தயாரிக்கிறார்.
விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக காவ்யா தாப்பர் நடிக்கிறார். தேவ் கில், ஹரிஷ் பெராடி, ஜான் விஜய், ராதா ரவி, மன்சூர் அலி கான், ஒய்.ஜி.மகேந்திரன், ராஜா கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு விஜய் மில்டன் மற்றும் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்கள்.
படத்தின் தீம் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சொல்லப்படும் பிச்சைக்காரன் 2 கதை இதுதான்: முதல் பாகத்தில் கோடீஸ்வரரான விஜய் ஆண்டனி தனது தாயை கொடிய நோயில் இருந்து காப்பாற்ற ஜோதிடர்களின் அறிவுறுத்தல்படி 100 நாட்கள் பிச்சைக்காரனாக வாழ்வார். இது செண்டிமென்டும், ஆக்ஷனும் கலந்த கதை.
இரண்டாம் பாகத்தில் ஆக்ஷனை நம்பி களத்தில் இறங்குகிறார் விஜய் ஆண்டனி. முதல்பாகத்தில் பிச்சைக்காரனாக வாழ்ந்தபோது ஏழை எளிய மக்களின் வலிமைய உணர்ந்து கொள்கிறார். இந்த பாகத்தில் பணக்காரனாக இருந்தாலும் பிச்சைக்காரனாக வேடம் அணிந்து மக்களை பிச்சைக்காரர்களாக மாற்றும் பணக்காரர்களை எதிர்த்து போராடுகிறார்.
வரலாறு பணக்காரர்களால் எழுதப்படுகிறது, ஏழைகளின் வலி அவர்களுக்கு புரியாது, நீ பண்ணப்போற புண்ணியம் உனக்கு தேவையானதை கொடுக்கும் என்ற தத்துவங்கள் படத்தில் சொல்லப்படுகிறது.