டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், ராதிகா சரத்குமர் நடிக்கும் கொலை படத்தின் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. விஜய் ஆண்டனி, இதில் துப்பறியும் நிபுணராக நடித்திருக்கிறார். ரித்திகா சிங், சந்தியா என்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார், பாலாஜி குமார் இயக்கி உள்ளார்.
இந்த படம் தெலுங்கில் ஹத்யா என்ற பெயரிலும் தயாராகி உள்ளது. இதுகுறித்து இயக்குனர் பாலாஜி குமார் கூறியதாவது: கதை லீலா என்ற அழகான மாடலைப் பற்றியது, அவர் தனது குடியிருப்பில் கொலை செய்யப்பட்டார். அந்த கொலையின் பின்னணியில் படம் தயாராகி உள்ளது. கொலையாளி எப்படி கண்டுபிடிக்கப்பட்டார் என்பதுதான் திரைக்கதை என்றார்.
விஜய் ஆண்டனி மற்றும் ரித்திகா சிங், ராதிகா சரத்குமார் தவிர, ஜான் விஜய், முரளி சர்மா, சித்தார்த்தா ஷங்கர், அர்ஜுன் சிதம்பரம், கிஷோர் குமார், சம்கித் போஹ்ரா உள்பட பலர் நடித்துள்ளனர். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார்.




