தெலுங்கானா மாநில சினிமா விருதுகள்: நேரில் விருது பெற்ற அல்லு அர்ஜுன் | அப்பாவை அப்படி பார்த்தது மகிழ்ச்சி: கீர்த்திபாண்டியன் நெகிழ்ச்சி | கவிஞர்.நா.முத்துக்குமார் இசைச்கச்சேரி: கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் பங்கேற்பு | மணிரத்னத்தை மறுத்தாரா ரஜினி? | விரைவில் இயக்குனராகும் பார்த்திபன் மகன் ராதாகிருஷ்ணன் | தயாராகிறார் அடுத்த கேப்டன் | நட்பு வட்டார படங்களில் நடிப்பு: புலம்பும் நடிகை | கலையும் கருணையும்... அருண்மொழி தேவன் | நடிப்பு, பாட்மின்டன் ஸ்ரீசுவேதா-வின் விருப்பங்கள் | காதோடு தான் பேசுவேன்...! குரலுக்கு ஒரு கோபிகா |
விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், ராதிகா சரத்குமர் நடிக்கும் கொலை படத்தின் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. விஜய் ஆண்டனி, இதில் துப்பறியும் நிபுணராக நடித்திருக்கிறார். ரித்திகா சிங், சந்தியா என்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார், பாலாஜி குமார் இயக்கி உள்ளார்.
இந்த படம் தெலுங்கில் ஹத்யா என்ற பெயரிலும் தயாராகி உள்ளது. இதுகுறித்து இயக்குனர் பாலாஜி குமார் கூறியதாவது: கதை லீலா என்ற அழகான மாடலைப் பற்றியது, அவர் தனது குடியிருப்பில் கொலை செய்யப்பட்டார். அந்த கொலையின் பின்னணியில் படம் தயாராகி உள்ளது. கொலையாளி எப்படி கண்டுபிடிக்கப்பட்டார் என்பதுதான் திரைக்கதை என்றார்.
விஜய் ஆண்டனி மற்றும் ரித்திகா சிங், ராதிகா சரத்குமார் தவிர, ஜான் விஜய், முரளி சர்மா, சித்தார்த்தா ஷங்கர், அர்ஜுன் சிதம்பரம், கிஷோர் குமார், சம்கித் போஹ்ரா உள்பட பலர் நடித்துள்ளனர். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார்.