தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் |
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருந்தார். கோவிட்டுக்குப் பிந்தைய பாதிப்புகளால் சிகிச்சை மேற்கொண்டதாக ஐஸ்வர்யா தெரிவித்திருந்தார்.
தற்போது மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி மீண்டும் தன்னுடைய 'முசாபிர்' ஆல்பப் பணிகளை ஆரம்பித்துள்ளார். அது குறித்து சமூக வலைத்தளங்களில் படப்பிடிப்புத் தளப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். “நீங்கள் அதைப் பார்க்கும் போது ஒரு மேஜிக் உருவாவதைப் பார்க்க முடியும், அது ஒரு புதிய உலகம்… மீண்டும் பணிக்கு திரும்பிவிட்டேன். மீண்டும் திரும்பியது சிறப்பு…. நான் இங்கு நீண்ட நாட்களாக இல்லாததால்… படப்பிடிப்பில் இருப்பது போல் எதுவும் சிறப்பில்லை…” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஐஸ்வர்யா தற்போது 'முசாபிர்' என்ற ஆல்பம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த ஆல்பத்தின் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா. தமிழில் 'பயணி', தெலுங்கில் 'சஞ்சாரி', மலையாளத்தில் 'யாத்ராக்காரன்', ஹிந்தியில் 'முசாபிர்' என்றும் இந்த ஆல்பம் வெளியாக உள்ளது. தமிழ்ப் பாடலை அனிருத் பாடுகிறார். போஸ்டரில் ஐஸ்வர்யாவின் பெயர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என போடப்பட்டுள்ளது.