சூர்யாவின் ரெட்ரோ சிங்கிள் பாடல் வெளியானது! | நன்றி மாமே - பிரபு, ஆதிக்குடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் திரிஷா வெளியிட்ட பதிவு! | கமலின் 237வது படம்! புதிய அப்டேட் கொடுத்த ராஜ்கமல் பிலிம்ஸ்!! | அஜித்துக்காக ஐ அம் வெயிட்டிங்! - வெங்கட் பிரபு சொன்ன தகவல் | அடுத்த நட்சத்திர காதல் கிசுகிசு - துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் | குடும்பத்தாருடன் ஹைதராபாத் திரும்பிய பவன் கல்யாண் | விஷ்வம்பரா - 70 வயதிலும் நடனத்தில் அசத்தும் சிரஞ்சீவி | ‛‛என்னிடம் நானே மன்னிப்பு கேட்க வேண்டும்'': தவறில் இருந்து பாடம் கற்ற சமந்தா | ‛யார், ஜமீன் கோட்டை' நடிகர் ஜி.சேகரன் காலமானார் | சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவு: ‛பூலே' படத்துக்கு ரிலீஸ் சிக்கல் |
சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் நாளை(மார்ச் 10) வெளிவருகிறது. இதனை பாண்டிராஜ் இயக்கி உள்ளார். பிரியங்கா அருள் மோகன், வினய், சத்யராஜ், ராஜ்கிரண், சூரி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கான புரமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கேரளா சென்ற சூர்யா, அங்கு பிரபல நடிகை கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து பேசி உள்ளார்.
"இப்படி ஒரு கொடுமை யாருக்கும் நடந்திருக்கக் கூடாது. இது நியாயமற்ற செயல். நவீனமான உலகத்தில் இந்த மாதிரியான விஷயங்கள் நடக்கவே கூடாது. அதை நினைக்கும் போது மனசு வலிக்கிறது” என பேசியுள்ளார்.
எதற்கும் துணிந்தவன் படமும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களின் பின்னணில் உருவாகி உள்ள படம் என்று கூறப்படுகிறது. படத்தின் டீசர் மற்றும் டிரைலரும் அதனை உறுதிப்படுத்துகிறது.