இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் நாளை(மார்ச் 10) வெளிவருகிறது. இதனை பாண்டிராஜ் இயக்கி உள்ளார். பிரியங்கா அருள் மோகன், வினய், சத்யராஜ், ராஜ்கிரண், சூரி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கான புரமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கேரளா சென்ற சூர்யா, அங்கு பிரபல நடிகை கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து பேசி உள்ளார்.
"இப்படி ஒரு கொடுமை யாருக்கும் நடந்திருக்கக் கூடாது. இது நியாயமற்ற செயல். நவீனமான உலகத்தில் இந்த மாதிரியான விஷயங்கள் நடக்கவே கூடாது. அதை நினைக்கும் போது மனசு வலிக்கிறது” என பேசியுள்ளார்.
எதற்கும் துணிந்தவன் படமும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களின் பின்னணில் உருவாகி உள்ள படம் என்று கூறப்படுகிறது. படத்தின் டீசர் மற்றும் டிரைலரும் அதனை உறுதிப்படுத்துகிறது.