தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் |
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா அருள்மோகன், சத்யராஜ், சரண்யா, வினய் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் ‛எதற்கும் துணிந்தவன்'. மார்ச் 10ல் தியேட்டர்களில் இந்த படம் வெளியாகிறது. சூர்யாவின் முந்தைய இரண்டு படங்கள் ஓடிடியில் வெளியான நிலையில் இந்த படம் தியேட்டர்களில் வெளியாகிறது. இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பா.ம.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சூர்யாவின் முந்தைய படமான ஜெய் பீம் படம் பாராட்டை பெற்றாலும் அதில் வன்னியர்களை தவறாக சித்தரித்ததாக சர்ச்சையும் வெடித்தது. இதற்கு பா.ம.க.வினர் அப்போதே எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில் இதையே காரணம் காட்டி ஜெயம் பீம் பட விவகாரத்தில் சூர்யா மன்னிப்பு கேட்கும் வரை அவரது படத்தை கடலூர் மாவட்டத்தில் திரையிட அனுமதிக்க கூடாது என பா.ம.கட்சியின் மாணவர் சங்க மாநில செயலாளர் விஜயவர்மன் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனால் கடலூர் மாவட்டத்தில் சூர்யா படம் திரையிடுவதில் புதிய சிக்கல் உருவாகி உள்ளது.