பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
தெலுங்கு திரையுலகில் உள்ள கமர்சியல் இயக்குனர்களில் முக்கியமானவர் போயபதி சீனு. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பாலகிருஷ்ணாவை வைத்து இவர் இயக்கிய அகண்டா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன் வசூலையும் வாரி குவித்தது. இதையடுத்து அவர் ராம் பொத்தினேனியை வைத்து இயக்கியுள்ள படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் தற்போது தீவிரம் காட்டி வருகிறார். இந்த நிலையில் நடிகர் சூர்யாவை வைத்து படம் இயக்க வேண்டும் என்கிற தனது விருப்பத்தை பொதுமேடையிலேயே வெளிப்படுத்தியுள்ளார் போயபதி சீனு.
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் வரும் மார்ச் மாதம் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதை தொடர்ந்து ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீடு என புரமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் கலந்துகொண்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை சமீபத்தில் நடத்தினர்.
இதை தொடர்ந்து 'எவரிகி தல வன்சாடு' என்கிற பெயரில் தெலுங்கில் வெளியாக உள்ள இந்தப்படத்திற்காக ஐதராபாத்தில் புரமோஷன் நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். இதில் சிறப்பு விருந்தினராக போயபதி சீனு கலந்து கொண்டார். அப்போது அவர் மேடையில் பேசும்போது, சூர்யாவுடன் ஒரு படத்தில் நிச்சயமாக இணைந்து பணியாற்றுவேன் என தனது விருப்பத்தை வெளிப்படுத்த, சூர்யாவும் அதை ஆமோதித்தார்.