புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தெலுங்கு திரையுலகில் மோஸ்ட் எலிஜிபில் பேச்சிலர் ஆக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ். 40 வயதை தாண்டிய அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் காலம் கடத்தி வருகிறார். இன்னொரு பக்கம் இவருக்கும் அனுஷ்காவுக்கும் இடையே காதல் இருக்கிறது, அவரைத்தான் திருமணம் செய்ய போகிறார் என்று கூட அவ்வப்போது செய்திகள் பரபரப்பாக கிளம்பி அப்படியே அமுங்கி விடும்.
இந்த நிலையில் பிரபாஸ் நடிப்பில் அடுத்த வாரம் ராதே ஷ்யாம் என்கிற படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கைரேகை ஜோசியத்தில் கை தேர்ந்தவராக நடித்துள்ளார் பிரபாஸ்.
மும்பையில் நடைபெற்ற இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது நிருபர் ஒருவர் அவரிடம் படத்தில் எல்லோருக்கும் கல்யாண விஷயம் குறித்து கை ரேகை பார்த்து சொல்கின்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறீர்கள், அந்த வகையில் உங்களது திருமணம் எப்போது என்று உங்களால் கூற முடியுமா என்று கேட்டார். அதற்கு பதிலளித்த பிரபாஸ் காதல் விசயத்தில் எப்போதுமே என்னுடைய கணிப்புகள் தவறாகவே போயிருக்கின்றன. அதனால்தான் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று கலாட்டாவாக பதில் கூற அங்கிருந்த நிருபர்கள் அனைவரும் சிரித்தனர்.