திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
இயக்குனர் அமீர், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா கூட்டணி தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு கூட்டணி. 'மௌனம் பேசியதே, ராம், பருத்தி வீரன், ஆதி பகவன்' ஆகிய படங்களில் இணைந்தவர்கள் சுமார் 9 வருட இடைவெளிக்குப் பிறகு 'இறைவன் மிகப் பெரியவன்' படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளார்கள்.
இப்படத்தின் அறிமுக விழா கடந்த வாரம்தான் நடைபெற்றது. இந்தக் கூட்டணி மீது இருவரது ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்பை வைத்துள்ளார்கள். உடனடியாக படத்தின் பாடல் பதிவு வேலைகளையும் ஆரம்பித்துவிட்டார்கள்.
இது குறித்து யுவன் கூறுகையில், “22..02.2022 என்ற சிறப்பு நாளில் 'இறைவன் மிகப் பெரியவன்' படத்திற்கான பாடல் பதிவு நடந்தது” என தெரிவித்துள்ளார். யுவன் இசையமைத்துள்ள 'வலிமை' படம் நாளை மறுதினம் (பிப்., 24) வெளிவர உள்ள நிலையில் யுவனின் எதிர்பார்ப்புக்குரிய இந்த புதிய படத்தின் அப்டேட் யுவன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.