பிளாஷ்பேக் : குழந்தையாக வந்தார், சிறுமியாக மறைந்தார் : மின்னி மறைந்த ஷோபா வாழ்க்கை | கதையின் நாயகனாக விநாயகன் ; வில்லனாக மம்முட்டி | கவியூர் பொன்னம்மாவின் மறைவும் மஞ்சு வாரியரின் நிறைவேறாத ஆசையும் | செப்டம்பர் 27ல் நான்கு முனைப் போட்டி | 'ஜானு பாப்பா' என அழைக்கும் ரசிகர்கள் : ஜான்வி கபூர் மகிழ்ச்சி | பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? |
மலையாளத்தில் வரவேற்பை பெற்ற ‛ஜோசப்' படம் தமிழில் ‛விசித்திரன்' என்ற பெயரில் ரீ-மேக் ஆகி உள்ளது. ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடித்து தயாரித்துள்ளார். மலையாளத்தில் இயக்கிய பத்மகுமாரே தமிழிலும் இயக்கி உள்ளார். இயக்குனர் பாலா தனது பி ஸ்டுடியோஸ் சார்பில் இந்த படத்தை வெளியிடுகிறார்.
இப்பட விழாவில் பேசிய இயக்குனர் பாலா, ‛‛மலையாளத்தை காட்டிலும் இந்த படம் நன்றாக வந்துள்ளது. ஆர்.கே.சுரேஷிற்கு நல்லதொரு படம். இதை வைத்து அடுத்தடுத்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடி. இனி ஏனோ தானோ என படங்களை தேர்வு செய்யாதே பெயரை கெடுத்து கொள்ளாதே, உன் மரியாதையை காப்பாத்திக்கோ'' என அட்வைஸ் செய்தார்.