துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
தென்னிந்திய அளவில் புதிய சாதனை என மகேஷ் பாபுவின் 'சர்க்காரு வாரி பாட்டா' படத்தின் முதல் சிங்கிளான 'கலாவதி' பாடலின் சாதனையை ஒரு நாள் கூட கொண்டாடவிடவில்லை 'அரபிக்குத்து'.
கடந்த சில நாட்களாகவே விஜய் ரசிகர்களுக்கும், மகேஷ்பாபு ரசிகர்களுக்கும் சமூக வலைத்தளங்களில் சண்டை நடந்து வந்தது. விஜய்யின் 'பீஸ்ட்' படத்தின் முதல் சிங்கிளான 'அரபிக்குத்து' பாடலும், மகேஷ்பாபுவின் தெலுங்குப் படமான 'சர்க்காரு வாரி பாட்டா' படத்தின் முதல் சிங்கிளான 'கலாவதி' பாடலும் நேற்று பிப்ரவரி 14 அன்று வெளியாகும் என அறிவித்தார்கள்.
ஆனால், 'கலாவதி' பாடலை ஒரு நாள் முன்னதாக பிப்ரவரி 13ம் தேதியன்றே வெளியிட்டார்கள். தென்னிந்திய அளவில் 'ஆல் டைம் ரெக்கார்டு' என 24 மணி நேரத்தில் 16 மில்லியன் பார்வைகள், 8 லட்சம் லைக்குகள் என 'சர்க்காரு வாரி பாட்டா' குழு கொண்டாட ஆரம்பித்தது. ஆனால், அவர்களது மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் சில மணி நேரங்கள் மட்டுமே நீடித்தது.
'கலாவதி' பாடல் 24 மணி நேரத்தில் படைத்த சாதனையை அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளாக 'பீஸ்ட்' சிங்கிளான 'அரபிக்குத்து' முறியடித்துவிட்டது. நேற்று மாலை யூ டியூபில் வெளியான இந்தப் பாடல் இதுவரையிலும் 20 மில்லியன் பார்வைகள், 2 மில்லியன் லைக்குகள் சாதனை என 17 மணி நேரத்திற்குள்ளாகவே மிகப் பெரிய சாதனையைப் படைத்துள்ளது.
தென்னிந்திய அளவில் 24 மணி நேரத்திற்குள் அதிகப் பார்வைகள், அதிக லைக்குள் என புதிய சாதனையைப் படைத்துள்ள' அரபிக்குத்து'. யு டியூப் சாதனைகளில் விஜய் பாடல்கள்தான் எப்போதுமே முன்னிலை என்பதை அவரது ரசிகர்கள் மீண்டும் நிரூபித்துவிட்டார்கள்.