மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே பரபரப்பை ஏற்படுத்தி வரும் காதல் ஜோடி யார் என்பது அனைவருக்குமே தெரியும். இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா தான் அந்த ஜோடி. இருவருக்கும் திருமண நிச்சயம் ஆகிவிட்டது. இருந்தாலும் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் காதல் ஜோடிகளாகத்தான் சுற்றி வருகிறார்கள். அவ்வப்போது தன்னுடைய சமூக வலைத்தளங்களில் ஜோடியான புகைப்படங்களைப் பதிவிட்டு பலரையும் பொறாமைப்பட வைப்பது விக்னேஷ் சிவனின் வழக்கம்.
இன்று காதலர் தினம் என்பதால் சும்மா இருப்பாரா…?. அவருக்கு நயன்தாரா பூங்கொத்து கொடுக்கும் வீடியோவைப் பகிர்ந்து, “அவள் உங்களிடம் வந்து பூக்களைக் கொடுக்கும் போது, முதல் முறை போலவே தோன்றும்…இது நிஜமாகவே மகிழ்ச்சியான காதலர் தினம் தான்” என்று பதிவிட்டு அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதன் உடன் காத்துவாக்குல ஒரு காதல் என பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இருவரும் நெருக்கமாகக் கட்டிப்பிடித்து தங்கள் காதலைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.