புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் ஹீரோவான சிரஞ்சீவி இரு தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் உள்ள பிரம்மாண்ட ராமானுஜர் சிலையை தரிசித்தார். பத்து நாட்களுக்கு முன்புதான் அந்த சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
அதற்கடுத்து கேரளாவில் உள்ள கோயில்களுக்குச் சென்று சிரஞ்சீவி தரிசனம் செய்து வருகிறார். மனைவி சுரேகாவுடன் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கும் மற்றும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்துள்ளார். அங்கு கோவில் நிர்வாகிகள் அவரை வரவேற்று தரிசனத்துக்கான ஏற்பாடுகளை செய்து தந்துள்ளனர்.
சபரிமலை கோயிலுக்குச் சென்ற புகைப்படங்களை அவர் சமூகவலைதளத்திலும் பதிவிட்டுள்ளார். “நீண்ட இடைவெளிக்குப் பிறகு சபரிமலைப் பயணம். கூட்டத்தாலும், என்னை அடையாளம் கண்டு கொண்டு உற்சாகமடைவதைத் தவிர்க்கவும், கோயிலுக்குச் செல்ல 'டோலி' சேவையைப் பயன்படுத்தினோம். அதைத் தூக்கிச் சென்றவர்களுக்கு என்னுடைய நன்றி,” என டோலி தூக்கியவர்களுக்கு நன்றி தெரிவித்து வணக்கம் சொல்லும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் கொரானோவால் பாதிக்கப்பட்டு உடல்நலம் தேறியதால் சிரஞ்சீவி ஆன்மீகப் பயணம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.