புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தலைவர் என். இராமசாமியும் மற்ற நிர்வாகிகளும் இணைந்து தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், "தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் திரைத்துறை சம்பந்தமான பல்வேறு கோரிக்கைகள் தமிழக முதல்வரிடம் வைத்தோம். அவற்றை பரிசீலித்த முதல்வர் அவர்கள் திரையரங்குகளில் 50 சதவிகித மக்களை படம் பார்க்க அனுமதித்த முதல்வர் இன்று நூறு சதவிகிதம் திரையரங்குகளில் மக்கள் படம் பார்க்க அனுமதி வழங்கி ஆணை பிறப்பித்துள்ளார்.
தொழில்துறை சிறந்து விளங்க பல்வேறு சலுகைகளை வழங்கிவரும் முதல்வர் அவர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் வைத்துள்ள கோரிக்கைகளை ஒவ்வொன்றாக திரை உலகினருக்கு நிறைவேற்றி வருகிறார். அதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பிலும், தமிழ் திரை உலகம் சார்பிலும், கோடானுகோடி நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்."
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.