துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் சிவகார்த்திகேயனின் 20வது படத்தின் படப்பிடிப்பு இரு தினங்களுக்கு முன்பு காரைக்குடியில் ஆரம்பமானது. தெலுங்கில் 'ஜதி ரத்னலு' படத்தை இயக்கிய அனுதீப் இப்படத்தை இயக்கி வருகிறார்.
இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியான போதே லண்டன், புதுச்சேரி ஆகிய இடங்களை மோஷன் போஸ்டரில் காட்டியிருந்தார்கள். இரண்டு இடங்களையும் கதைக்களமாகக் கொண்ட படத்தில் இரண்டு நாயகிகள் நடிக்கப் போவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதில் வெளிநாட்டு கதாநாயகி ஒருவர் தேவையாம். ராஜமவுலி இயக்கியுள்ள 'ஆர்ஆர்ஆர்' படத்தில் நடித்துள்ள ஒலிவியா மோரிஸ் அந்த வெளிநாட்டு கதாநாயகி கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்கிறார்கள்.
மற்றொரு கதாநாயகியாக நடிக்க உள்ள நடிகை யார் என்பது குறித்தும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். விரைவில் படத்தின் கதாநாயகிகள் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகலாம்.