துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள மகான் படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்தநிலையில் இந்த படத்திற்கான பிரமோஷன் வீடியோ நேர்காணல் பேசிய துருவ் விக்ரம், விஜய்யின் மகன் சஞ்சய் இயக்கும் படத்தில் நடிக்க தான் தயாராக இருப்பதாக கூறி இருக்கிறார்.
விஜய்யும், விக்ரமும் திரைக்குப் பின்னால் நெருக்கமான நண்பர்களாக இருந்து வருவதால் துருவ் விக்ரமும், சஞ்சய்யும் சிறுவயதிலிருந்தே நண்பர்களாக இருந்தவர்கள். இதன் காரணமாகவே இப்படி கூறியிருக்கிறார்.
விஜய்யின் மகன் சஞ்சய் வெளிநாட்டில் சினிமா குறித்து படித்து வருபவர். விஜய்யை வைத்து தனது முதல் படத்தை இயக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நேரத்தில் துருவ் விக்ரம் தான் சஞ்சய் இயக்கத்தில் நடிக்க தயாராக இருப்பதை தெரிவித்திருக்கிறார். அதனால் சஞ்சய் தனது முதல் படத்தை விஜய்யை வைத்து இயக்குவாரா? இல்லை துருவ் விக்ரமை வைத்து இயக்கப்போகிறாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.