வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள மகான் படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்தநிலையில் இந்த படத்திற்கான பிரமோஷன் வீடியோ நேர்காணல் பேசிய துருவ் விக்ரம், விஜய்யின் மகன் சஞ்சய் இயக்கும் படத்தில் நடிக்க தான் தயாராக இருப்பதாக கூறி இருக்கிறார்.
விஜய்யும், விக்ரமும் திரைக்குப் பின்னால் நெருக்கமான நண்பர்களாக இருந்து வருவதால் துருவ் விக்ரமும், சஞ்சய்யும் சிறுவயதிலிருந்தே நண்பர்களாக இருந்தவர்கள். இதன் காரணமாகவே இப்படி கூறியிருக்கிறார்.
விஜய்யின் மகன் சஞ்சய் வெளிநாட்டில் சினிமா குறித்து படித்து வருபவர். விஜய்யை வைத்து தனது முதல் படத்தை இயக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நேரத்தில் துருவ் விக்ரம் தான் சஞ்சய் இயக்கத்தில் நடிக்க தயாராக இருப்பதை தெரிவித்திருக்கிறார். அதனால் சஞ்சய் தனது முதல் படத்தை விஜய்யை வைத்து இயக்குவாரா? இல்லை துருவ் விக்ரமை வைத்து இயக்கப்போகிறாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.