மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
மீடு சர்ச்சையின்போது பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு கூறினார் பாடகி சின்மயி. தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை மற்றும் பாலியல் தொல்லை பற்றி குரல் கொடுத்து வருகிறார். அதோடு வைரமுத்துவிற்கு எதிராக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார்.
இந்நிலையில் வைரமுத்துவின் இலக்கிய பொன்விழாவை முன்னிட்டு வைரமுத்து இலக்கியம் 50 எனும் இலச்சினையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு வாழ்த்தினார். இதுப்பற்றி, வாவ் என குறிப்பிட்டார் சின்மயி. மேலும், ‛‛இந்த வாவை பாத்துட்டு 'அவர பாராட்டுறீங்களே'ன்னு அறிவிலிகள் தான் கேப்பாய்ங்க. எத்தன பொண்ணுங்க மேல கைய்ய வெச்சாலும் எல்லா சப்போர்டும் உண்டுன்னு வெட்ட வெளிச்சமா தெரியுதே நம்ம முற்போக்கு நாட்ல. பெண்கள் இங்க பாதுகாப்பு எல்லாம் எதிர்பார்க்கக்கூடாது. நாம நம்ம வேலைய பாப்போம்'' என பதிவிட்டுள்ளார்.