Advertisement

சிறப்புச்செய்திகள்

ராகவா லாரன்ஸிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் | ''தமிழ் ஐசியூ.,வுல இருக்கு; எங்க போனாலும் தலைநிமிர்ந்து தமிழ்ல பேசுங்க'': செல்வராகவன் வலியுறுத்தல் | நடிகைகளே பொறாமைப்பட்ட நாயகி சில்க் ஸ்மிதா | உறவுகளின் மேன்மையைச் சொல்கிறதா 'மெய்யழகன்' டிரைலர் | ரஜினியின் வேட்டையன் படத்தின் முக்கிய கதைக்கரு வெளியானது! | பவன் கல்யாண் படத்தில் சிம்பு பாடிய பாடல் விரைவில் வெளியீடு | மற்றவர்களின் வாழ்க்கையை கெடுக்காதீர்கள்! ஜெயம் ரவி விவகாரத்தில் களம் இறங்கிய பாடகி கெனிஷா!! | அக். 2ல் வெளியாகும் வேட்டையன் பட டிரைலர் | கின்னஸ் சாதனை படைத்த சிரஞ்சீவி | ஜானி டெப்புக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகர் சித்தார்த்திடம் போலீசார் விசாரணை

06 பிப், 2022 - 02:27 IST
எழுத்தின் அளவு:
Police-are-investigating-actor-Siddharth

'பாட்மின்டன்' வீராங்கனை பற்றி, சமூக வலைதளத்தில் நடிகர் சித்தார்த் தரக்குறைவாக கருத்து பதிவிட்ட விவகாரம் தொடர்பாக, அவரிடம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, போலீசார் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பெற்றனர்.

'பாய்ஸ்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சித்தார்த், 42. பஞ்சாபில் பிரதமர் மோடி பயணத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து, பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவல், சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டார். அதில், 'நாட்டின் பிரதமரின் பாதுகாப்பில் சமரசம் செய்யப்பட்டால், அந்த நாடு பாதுகாப்பாக இருப்பதாக கூறிக் கொள்ள முடியாது' என கூறியிருந்தார். அதற்கு நடிகர் சித்தார்த் எதிர் கருத்து பதிவு செய்தபோது, சாய்னா நேவலை தரக்குறைவாக விமர்சித்திருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

'சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தேசிய பெண்கள் ஆணையம், டி.ஜி.பி., சைலேந்திரபாபுவுக்கு கடிதம் எழுதியது. அதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சைபர் கிரைம் போலீசார், சாய்னா நேவல் குறித்து சித்தார்த் பதிவு செய்த தரக்குறைவான கருத்துகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, 'சம்மன்' அனுப்பினர். 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக விசாரணை நடத்தவும் முடிவு செய்தனர்.

அதன்படி, இன்ஸ்பெக்டர் வினோத்குமார், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, சித்தார்த்திடம் விசாரித்து வாக்குமூலத்தை பதிவு செய்தார். அப்போது, 'இழிவுப்படுத்தும் நோக்கத்தில் கருத்து பதிவு செய்யவில்லை. அதற்காக, என் வார்த்தைகளை நான் நியாயப்படுத்தவில்லை. இதுபற்றி சாய்னா நேவலிடம் மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டேன். அவரும் அதை ஏற்றுக் கொண்டார்' என, சித்தார்த் கூறியுள்ளார்.

இவரது வாக்குமூலத்தை, தேசிய பெண்கள் ஆணையத்திற்கு அனுப்ப, போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக, சித்தார்த் மீது, தெலுங்கானா மாநிலத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
லதா மங்கேஷ்கர் மறைவு; தலைவர்கள் இரங்கல்லதா மங்கேஷ்கர் மறைவு; தலைவர்கள் ... மகள், மருமகனை சேர்க்க  ரஜினி தீவிர முயற்சி மகள், மருமகனை சேர்க்க ரஜினி தீவிர ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)