நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் | அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் |
இந்தியாவிலேயே 16 தேசிய விருதுகள் பெற்ற ஒரே இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன். குறைந்த படங்களே இயக்கி இருந்தாலும் அத்தனையும் விருதுகளை குவித்த படங்கள். எலி பத்தாயம், நாலு பெண்ணுகள், சுயம்வரம், மதிலுகள் உட்பட பல புகழ்பெற்றத் படங்களை இயக்கியுள்ளார்.
கேரள அரசு தற்போது வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தை துவக்கி உள்ளது. இதனால் தேவைக்கு அதிகமாக நிலம் உள்ளவர்கள், அந்த நிலத்தை ஏழைகளுக்கு வீடு கட்டுவதற்காக வழங்க வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் பினராயி விஜயனும், மாநில அமைச்சர் கோவிந்தனும் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
இதையடுத்து, தனது சொந்த ஊரான அடூரில் உள்ள பூர்வீக நிலத்தில், 13.5 சென்ட் நிலத்தை இலவசமாக வழங்க அடூர் கோபாலகிருஷ்ணன் முன் வந்துள்ளார். இது தொடர்பாக, அமைச்சர் கோவிந்தனை சந்தித்து நிலம் தொடர்பான டாக்குமெண்டுகளை வழங்கினார். அதனை பெற்றுக் கொண்ட கோவிந்தன், அடூரின் இந்த செயல் நாட்டுக்கே முன்மாதிரியானது என்று தெரிவித்துள்ளார்.