ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தமிழ் திரையுலகில் அதிகபட்ச வியாபார மார்க்கெட் உள்ள நடிகர்களின் வரிசையில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். திரையுலகில் நுழைந்து குறுகிய காலத்தில் இந்த உயரத்தை தொட்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் தனுஷின் 3 படத்தில் இணைந்து நடித்தாலும் முதன்முறையாக கடந்த 2012ல் பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினா என்கிற படத்தின் மூலம் தான் கதாநாயகனாக அறிமுகமானார். அந்தப் படம் வெளியாகி நேற்றுடன் பத்து வருடங்களை தொட்டுள்ளது. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் இந்த சாதனையை கொண்டாடி வருகிறார்கள்
அதேபோல மலையாள திரையுலகில் செகண்ட் ஷோ என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் துல்கர் சல்மான். பிரபல நடிகர் மம்முட்டியின் வாரிசாக இருந்தாலும் தனது நடிப்புத் திறமையாலும் வித்தியாசமான கதை தேர்வினாலும் முன்னணி நடிகர்கள் வரிசைக்கு உயர்ந்தார் துல்கர் சல்மான். இன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடிக்கும் பான் இந்திய நடிகராகவும் மாறிவிட்டார். இவர் நடித்த செகண்ட் ஷோ திரைப்படமும் பத்து வருடத்திற்கு முன்பு இதே தேதியில்தான் ரிலீஸ் ஆனது.
அந்தவகையில் ஒரே நாளில் ஹீரோவாக அறிமுகமான இவர்கள் திரையுலகில் போட்டி நிறைந்த தற்போதைய சூழலில் இன்று வெற்றிகரமான ஹீரோக்களாக பத்து வருடங்களை கடந்து வந்துள்ளார்கள் என்பது மிகப்பெரிய சாதனைதான்.