பிளாஷ்பேக்: எம்ஜிஆரை வாடா, போடா என்று அழைத்த ஒரே இயக்குனர் | 'குபேரா' முதல் நாள் வசூல்: முதற்கட்டத் தகவல் | 'ஆர்ஜேபி' என பெயரை சுருக்கிய ஆர்ஜே பாலாஜி | முன்னாள் கணவருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய கரிஷ்மா கபூர் | 'பராசக்தி' படப்பிடிப்பு விரைவில் மீண்டும் ஆரம்பம்? | விஜய் ஆண்டனியின் 'மார்கன்' படத்துக்கு யு/ஏ சான்றிதழ்! | 'டி என் ஏ'வை ஐஸ்வர்யா ராஜேஷ் பாராட்டியது ஏன் | விக்ரம்பிரபு பட விழாவில் ஆதிக்ரவிச்சந்திரன் | 'பறந்து போ' படத்திற்காக யுவன் சங்கர் ராஜா பாடிய பாடல் ஜூன் 24ல் ரிலீஸ்! | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்தில் கூலாக இருந்த விஜய்! - மமிதா பைஜூ சொன்ன தகவல் |
தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வரும் அஜித்குமார் - ஷாலினி ஆகிய இருவரும் சோசியல் மீடியாவில் இதுவரை கணக்கு தொடங்கவில்லை. என்றாலும் அஜித் பெயரில் ஏராளமான போலி வலைதளப் பக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக இது போன்ற கணக்குகளை அஜித்தின் ரசிகர்கள் தொடர வேண்டாம் என்று ஏற்கனவே அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா ஒரு தகவல் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது அஜித் மனைவி ஷாலினி பெயரிலும் போலி டுவிட்டர் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அஜித்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா கூறுகையில், ஷாலினி அஜித்குமார் பெயரில் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு எதுவும் இல்லை என்று தெரிவித்திருப்பவர், அவரது பெயரில் உருவாக்கப்பட்டுள்ள அந்த கணக்கு போலியானது. அதனால் அந்தக் கணக்கை யாரும் பின்தொடர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார் .