கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
பாகுபலி படங்களுக்கு பின் ராஜமவுலி இயக்கி உள்ள பிரம்மாண்ட படைப்பு ‛ஆர்ஆர்ஆர்'. ஜூனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா, ஆலியாபட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்டவர்களுடன் ஆங்கில நடிகர்கள் சிலரும் நடித்துள்ளனர். சுதந்திர போராட்டத்தை மையமாக வைத்து, கொமரபீம், அல்லூரி சீதா ராமராஜூ ஆகியோரின் வாழ்க்கையை தழுவி கற்பனை கதையாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. கீராவணி இசையமைத்துள்ளார்.
கொரோனா பிரச்னையால் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வளர்ந்து வந்த இந்த படம் ஜன., 7ம் தேதி ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் கொரோனா மூன்றாவது அலை காரணமாக பல மாநிலங்களில் தியேட்டர்கள் மூடப்பட்டதால் பட வெளியீட்டை தள்ளி வைத்தனர். சமீபத்தில் தியேட்டர்கள் முழுமையாக திறக்கப்பட்டால் மார்ச் 18 அல்லது ஏப்., 28ல் இந்த படத்தை வெளியிட தயார் என படக்குழு அறிவித்தனர்.
இந்தச்சூழலில் கொரோனா பாதிப்பு சற்று குறைய தொடங்கி உள்ளது. இதன்காரணமாக பல மாநிலங்கள் தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்துள்ளது. அதேசமயம் தியேட்டர்கள் தற்போது 50 சதவீதம் இருக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும் அடுத்த மாதத்திற்குள் தியேட்டர்கள் முழுமையாக 100 சதவீதம் அனுமதி கிடைக்கும் என ஆர்ஆர்ஆர் படக்குழு நம்புகின்றனர். இதன்காரணமாக ஆர்ஆர்ஆர் படத்தை மார்ச் 25ல் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.