ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தானா மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் வெளிவந்த 'புஷ்பா' படம் மியூசிக்கலாகவும் பெரிய வெற்றியைப் பெற்றது.
தெலுங்கில் தயாரிக்கப்பட்ட இப்படத்தின் பாடல்கள் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நேரடிப் படத்தின் பாடல்கள் போல ஹிட்டானது. இப்படத்தில் இடம் பெற்ற ஹிட் பாடலான 'ஸ்ரீவள்ளி…' பாடலை சித் ஸ்ரீராம் பாடியிருந்தார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் பாடியது ஸ்ரீராம்தான் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
'புஷ்பா' நாயகன் அல்லு அர்ஜுன் திடீரென 'புஷ்பா' படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சியில் 'ஸ்ரீவள்ளி' பாடலை சித் ஸ்ரீராம் பாடிய வீடியோவைப் பகிர்ந்து பெரிதும் பாராட்டியுள்ளார்.
“ஓய்வாக இருக்கும் போது இதை எழுத வேண்டும் என்றிருந்தேன். எனது சகோதரர் சித் ஸ்ரீராம் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சியில் 'ஸ்ரீவள்ளி' பாடலை மேடையில் பாடினார். எந்த இசையும் இல்லாமல் பாடி ஆரம்பித்தார். அவரது குரலுக்கு ஆதரவாக இசைக் கருவிகள் மெதுவாக வரும் என காத்திருந்தேன், ஆனால், வரவில்லை. எந்த இசையும் இல்லாமல் அவர் பாடினார். அவரது குரலில் அடித்துச் செல்லப்பட்டேன். எனது தலையில் ஏதோ ஒரு மேஜிக்கல் நிகழ்கிறது என நினைத்தேன். அவருக்கு இசை தேவையில்லை…..அவர்தான் இசை,” எனப் பாராட்டியுள்ளார்.