பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
பழம்பெரும் நடிகை ரத்னா. எம்.ஜி.ஆர் நடித்த எங்க வீட்டு பிள்ளை படத்தில் ஒரு எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தார். நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன், அவர் மாம்பழம் வேண்டும் என்றார். என்ற பாடலின் மூலம் புகழ்பெற்றவர். ஆனால் அதற்கு முன்பே 1964ம் ஆண்டு வெளியான தொழிலாளி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிவிட்டார். அதன் பிறகு நாம் மூவர், சபாஷ் தம்பி, அன்று கண்ட முகம், இதயக்கனி உள்பட பல படங்களில் நடித்தார். தெலுங்கு, கன்னட மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்திருந்தார்.
74 வயதான ரத்னா, சென்னை பாலவாக்கத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். மூச்சு திணறல் பிரச்சினை காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி கடந்த 19ந் தேதி மரணம் அடைந்தார். அவர் மரணம் அடைந்த தகவல் நேற்று தான் வெளியானது. ரத்னாவுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.