காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
பழம்பெரும் நடிகை ரத்னா. எம்.ஜி.ஆர் நடித்த எங்க வீட்டு பிள்ளை படத்தில் ஒரு எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தார். நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன், அவர் மாம்பழம் வேண்டும் என்றார். என்ற பாடலின் மூலம் புகழ்பெற்றவர். ஆனால் அதற்கு முன்பே 1964ம் ஆண்டு வெளியான தொழிலாளி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிவிட்டார். அதன் பிறகு நாம் மூவர், சபாஷ் தம்பி, அன்று கண்ட முகம், இதயக்கனி உள்பட பல படங்களில் நடித்தார். தெலுங்கு, கன்னட மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்திருந்தார்.
74 வயதான ரத்னா, சென்னை பாலவாக்கத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். மூச்சு திணறல் பிரச்சினை காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி கடந்த 19ந் தேதி மரணம் அடைந்தார். அவர் மரணம் அடைந்த தகவல் நேற்று தான் வெளியானது. ரத்னாவுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.