‛பஞ்சாயத்து' சீரிஸ் என்னை இந்தியா முழுக்க அறிய வைத்திருக்கிறது - நீனா குப்தா பெருமிதம் | டிஎன்ஏ படத்தை அவங்களுக்கு அர்ப்பணிக்கிறேன் : ஹீரோ அதர்வா முரளி நெகிழ்ச்சி | 'தி ராஜா சாப் 1000 கோடி வசூலிக்கும்' : இயக்குனர் மாருதி நம்பிக்கை | ஐதராபாத் திரைப்பட நகரம் பற்றி கஜோல் பேச்சு : திரையுலகம் அதிர்ச்சி | தக் லைப் - கர்நாடகா வினியோகஸ்தர் விலகல்? | குத்துச்சண்டை வீரராகிறார் மஹத் | கிஷோர் ஜோடியாக இணைந்த அம்மு அபிராமி | மலேசிய பாடகர் 'டார்க்கி' நாகராஜா வாழ்க்கை சினிமா ஆகிறது | வெப் தொடராக ஒளிபரப்பாகிறது முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை வழக்கு | பிளாஷ்பேக்: ஹீரோக்கள் ஆதிக்கத்தை வென்ற மாதுரி தேவி |
இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர்.ரகுமான், அவரது சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில சுவாரசியமான தகவல்கள், செய்திகளைப் பகிர்வார்.
சற்று முன் இரண்டு சிறுமிகள் பாடிய ஒரு தமிழ்ப் பாடலின் வீடியோவைப் பகிர்ந்து, “இந்த இரண்டு சகோதரிகள் சில சீரியசான கேள்விகளை இந்தப் பாடல் மூலம் கேட்கிறார்கள்” என்றும், “தண்ணீர், உணவு, மனித நேயம், அன்பு, இரக்கம்” ஆகிய ஹேஷ்டேக்குகளுடனும் குறிப்பிட்டுள்ளார் ரகுமான்.
அந்த சிறுமிகள் பாடிய பாடல் இயக்குனர் பாலா தயாரிப்பில், அருணகிரி இசையமைப்பில், அதர்வா ஆனந்தி, லால் நடித்து 2015ல் வெளிவந்த 'சண்டி வீரன்' படத்தில் இடம் பெற்ற 'தாய்ப்பாலும் தண்ணீரும்…' என்ற கிராமியப் பாடல். இந்த சிறுமிகளின் பாடலைப் பகிர்ந்து ஏ.ஆர்.ரகுமான் குறிப்பிட்டிருப்பதால் அந்த வீடியோவை தற்போது பலரும் பார்த்து பாராட்டி வருகிறார்கள்.