சரிந்த மார்க்கெட்டை காப்பாற்ற அதிரடி முடிவெடுத்த தாரா | உயர பறந்த 'லிட்டில் விங்ஸ்' : சாதனையை பகிரும் இயக்குநர் நவீன் மு | தோழிகளால் நடிகை ஆனேன்: சுபா சுவாரஸ்யம் | பிளாஷ்பேக்: திரைப்படக் கல்லூரி மாணவர்கள் திரையில் ஏற்படுத்திய புரட்சி “ஊமை விழிகள்” | ரிக்ஷாக்காரன், நட்புக்காக, பூஜை - ஞாயிறு திரைப்படங்கள் | நம்ப முடியவில்லை : ‛கீதா கோவிந்தம்' குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி பதிவு | 78 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய தனுஷ் பட நடிகை | அஜித் 64வது படம் எந்த மாதிரி கதை : ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | கூலி படத்தில் அமீர்கானை வீணடித்து விட்டார்கள் : ரசிகர்கள் ஆதங்கம் | ஆகஸ்ட் 22-ல் ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி |
தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரக் குடும்பமாக ரஜினிகாந்த் குடும்பமும், தனுஷ் குடும்பமும் இருக்கிறது. ரஜினிகாந்தின் இரு மகள்களும் திரைப்படங்களை இயக்கியுள்ளனர். தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா ஒரு திரைப்பட இயக்குனர், அண்ணன் செல்வராகவன் திரைப்பட இயக்குனர், தற்போது நடிகரும் கூட.
திரையுலகில் அவ்வப்போது வெளிவந்த சில வதந்திகளின் ஊடேதான் தனுஷ், ஐஸ்வர்யா திருமண வாழ்க்கை கடந்த 18 வருடங்களாக இருந்தது. ரஜினிகாந்தின் மருமகன் என்று ஆன பிறகு தனுஷின் திரையுலக வாழ்க்கையிலும் அவருக்கென ஒரு தனி இமேஜ் உருவாகி நடிகராகவும் ஒரு ஏற்றத்தைக் கண்டார். சில முக்கிய இயக்குனர்களின் படங்கள் அவரை சிறந்த நடிகராக உருமாற்றின.
2010ல் வெளிவந்த 'ஆடுகளம்' படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது வாங்கினார். மனைவி ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் '3' படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் இடம் பெற்ற 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் அவரை இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் கொண்டு போய் சேர்த்தது. பின்னர் ஹிந்தியிலும் அறிமுகமானார். அமிதாப்புடன் இணைந்து நடித்தார். பிரெஞ்ச் படம், ஹாலிவுட் படம் என சர்வதேச நடிகராகவும் மாறியுள்ளார் தனுஷ்.
தனுஷ், ஐஸ்வர்யா இருவரது பிரிவு அறிவிப்பு திரையுலகில் உள்ள அவர்களுக்கு நெருக்கமானவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஒரு சிலர் அவர்கள் இணைந்து வாழ வேண்டும் என்று சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஒரு காலத்தில் ரஜினி கூட கோபத்தில் மனைவி லதாவை பிரிய நினைத்தாகவும், அப்போது ரஜினியை அறிமுகப்படுத்திய இயக்குனர் கே பாலசந்தர் உள்ளிட்டவர்கள் சமரசம் பேசி அவர்களை மீண்டும் சேர்த்து வைத்ததாகவும் திரையுலகில் ஒரு தகவல் சுற்றி வருகிறது.
இந்த சமரச முயற்சி எந்த அளவிற்குச் செல்லும் என்பது இனிமேல்தான் தெரியும். சமூக வலைத்தளங்களில் தன்னுடைய பெயரை இன்னும் ஐஸ்வர்யா ஆர் தனுஷ் என்றே அவர் தொடர்வது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று.