ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
இளையராஜாவின் திரையிசை வரலாற்றில் இன்னொரு சாதனை நிகழ இருக்கிறது. உலகத்திலேயே எடை குறைவான சாட்டிலைட் தயாரிக்கும் தமிழகத்தை சேர்ந்த ஒரு மாணவர்கள் குழு இந்த ஆண்டு இன்னும் அதிக எடையை குறைத்து ஒரு புதிய சாட்டிலைட்டை வடிவமைத்திருக்கிறது. இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்ரோ உதவியுடன் இளையராஜா இசையமைத்துள்ள பாடல் இடம்பெற்றுள்ள சாட்டிலைட்டை விண்வெளிக்கு அனுப்ப இந்த மாணவர்கள் குழு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக இளையராஜாவுடன் நீண்ட காலமாக பயணித்து வரும் ஸ்ரீராம் நமது நாளிதழக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில், ‛இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, புதுமையான முயற்சியாக மாணவர்கள் குழு வடிவமைத்துள்ள சாட்டிலைட்டில் இளையராஜாவின் பாடலை ஒலிக்க செய்ய உள்ளனர். இதற்காக பிரதமர் மோடியுடன் கலந்தாலோசிக்கப்பட்டது. கடந்த 75 ஆண்டுகள் நிகழ்ந்த இந்தியாவின் புதுமைகளையும், இனிவரும் காலங்களில் இந்த பாரதம் நம்பர் ஒன் தேசமாக இருக்கும் என்பதையும் உள்ளடக்கிய பாடலை இளையராஜா இசையமைத்துள்ளார். சுவானந்த் கிர்கிரே எழுதிய ஹிந்தி பாடலாக இது உருவாகியுள்ளது. இதனை தமிழிலும் இளையராஜா இசையமைக்க விரும்புகிறார்,' என்றார்.
இதனையடுத்து இளையராஜாவின் பாடல் விரைவில் விண்வெளியில் ஒலிக்க போகிறது. இதற்காக அவர் பணம் எதுவும் பெற்றுக்கொள்ளாமல், நாட்டிற்காக தனது பங்களிப்பாக இருக்கட்டும் என இசையமைத்து கொடுத்துள்ளார்.