சகலகலா வல்லவன் ‛ஹேப்பி நியூர்' பாடலை படமாக்கிய ஒளிப்பதிவாளர் பாபு காலமானார் | டிச., 25ல் சிறை ரிலீஸ் : உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட விக்ரம் பிரபு படம் | இமயமலை பயணத்தை நிறைவு செய்த ரஜனிகாந்த் | விஜய் தேவரகொண்டா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் | 2024 தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு | 'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் |
கொரோனா 3வது அலையில் பல சினிமா பிரபலங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நடிகை கீர்த்தி சுரேஷும் ஒருவர். ஒரு வாரத்திற்கு முன்பு, தனக்கு கொரானோ பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், லேசான அறிகுறி என்பதால் வீட்டிலேயே ஓய்வெடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது, “நெகட்டிவ்' என்பது இந்தக் காலத்தில் பாசிட்டிவ்வான விஷயமாகிவிட்டது. உங்கள் அனைவரின் அன்புக்கும், பிரார்த்தனைக்கும் நன்றி. நீங்கள் அனைவரும், பொங்கல், சங்கராந்தியை சிறப்பாகக் கொண்டாடி இருப்பீர்கள் என நினைக்கிறேன்,” என்று குறிப்பிட்டு சில செல்பி புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.
ஏற்கெனவே ஒல்லியாக மாறிய கீர்த்தி ஒரு வார கொரானோ பாதிப்பில் இன்னும் ஒல்லியாக மாறியிருக்கிறார். கொரானோவிலிருந்து மீண்டு வந்துள்ள கீர்த்திக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.