இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சின்னத்திரை நட்சத்திர நாயகி தர்ஷா குப்தா. அவளும் நானும் என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதன்பிறகு முள்ளும் மலரும், செந்தூரப்பூவே தொடர்களில் நடித்தார். தற்போது சினிமாவில் ஹீரோயின் ஆகிறார்.
நெப்டியூன் எண்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் தர்ஷா குப்தாதான் நாயகி. நாயகனாக அசோக் குமார் நடிக்கிறார். டைகர் தங்கதுரை,அங்காடித்தெரு மகேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இன்பான்ட் பரத் ஒளிப்பதிவு செய்கிறார். ஜெய்கிருஷ்ணா இசை அமைக்கிறார். குருசேனாபதி இயக்குகிறார்.
படம் பற்றிஅவர் கூறியதாவது: ஒரு மலை பிரதேசத்தில் அடுத்தடுத்து நடக்கின்ற விசித்திரமான கொலைகளை மையமாக வைத்து உருவாகும் படம். ஏற்காடு, மலேசியா மற்றும் பல இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.