லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
பஞ்சாப் மாநில சுற்று பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு குறைபாடு குறித்து நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவல், "பிரதமரின் பாதுகாப்பில் தவறு இருந்தால் அந்த நாடு பாதுகாப்பானதாக இருக்க முடியாது" என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த நடிகர் சித்தார்த், சாய்னாவின் பாலினம் குறித்து அவதூறான பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.
இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தது. தேசிய மகளிர் ஆணையம் சித்தார்த் மீது சட்ட நடவடிக்கை எடுக்க காவல்துறையை கேட்டுக் கொண்டது. இந்த விஷயம் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கிய நிலையில் நடிகர் சித்தார்த், சாய்னாவிடம் மன்னிப்பு கேட்டார். சித்தார்த்தின் மன்னிப்பை ஏற்றுக்கொண்ட சாய்னா, ‛அவரின் விமர்சனத்தை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையென்றாலும், ஒரு பெண்ணை இதுபோன்று குறிவைத்து தாக்கக் கூடாது. எனினும் அவர் மன்னிப்பு கேட்டதில் மகிழ்ச்சி. சித்தார்த்தை கடவுள் ஆசிர்வதிப்பாராக,' எனக் கூறியிருந்தார்.
சித்தார்த்தின் இந்த மன்னிப்பு அறிக்கைக்கு பல்வேறு விதமான கமெண்ட்கள் குவிந்து வருகின்றன. இதனை பார்த்த நெட்டிசன் ஒருவர் ‛இந்த அறிக்கை நன்றாக எழுதப்பட்டுள்ளது. பொது வெளியில் மன்னிப்பு கேட்பதற்கும் ஒரு தைரியம் வேண்டும்' என பாராட்டியிருந்தார். இதனை பார்த்த நடிகை கஸ்தூரி, ‛தைரியமா? எல்லாத் தரப்பிலிருந்தும் சீற்றம்தான் எழுந்துள்ளது' என குறிப்பிட்டு தன் பங்குக்கு தனது கருத்தையும் பதிவு செய்துள்ளார்.